×

ஜலகண்டாபுரம் அருகே வீட்டை எழுதிக் கேட்டு தந்தை அடித்துக் கொலை: மகன்கள் வெறிச்செயல்

ஜலகண்டாபுரம்: ஜலகண்டாபுரம் அருகே, வீட்டை எழுதி தரும்படி கேட்டு தந்தையை மகன்களே அடித்துக் கொன்றனர். சேலம் மாவட்டம், ஜலகண்டாபுரம் அடுத்த ஆடையூர், குடியானூர் பகுதியைச் சேர்ந்தவர் சீரங்கன் (64). அரசு பஸ் டிரைவராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது முதல் மனைவி சீரங்கம்மாள். இவர்களுக்கு சரவணன் (35) (அரசு போக்குவரத்து கழக டிரைவர்), ராஜ்குமார் (31) (சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார்) என்ற 2 மகன்கள் உள்ளனர். சீரங்கன் கருத்து வேறுபாடு காரணமாக சீரங்கம்மாளை விவாகரத்து செய்துவிட்டு, ராஜேஸ்வரி என்பவரை 2வதாக திருமணம் செய்து, ஜலகண்டாபுரம் அடுத்த சூரப்பள்ளி சோரையான் வளவில், புதிதாக வீடு கட்டி  வசித்து வந்தார்.

இந்நிலையில், முதல் மனைவியின் மகன்களுக்கு, ஆடையூர் பகுதியில் உள்ள 5 ஏக்கர் நிலத்தில், ஆளுக்கு தலா 2 ஏக்கர் பிரித்து தருவதாக தெரிவித்தார். ஆனால் சீரங்கன் வசிக்கும் வீட்டை, தனது பெயருக்கு எழுதித் தரும்படி இளையமகன் ராஜ்குமார், கேட்டு தகராறு செய்துள்ளார். நேற்று காலை சரவணன், ராஜ்குமார் மற்றும் அவரது மனைவி யமுனாதேவி (25) ஆகியோர், சீரங்கன் வீட்டுக்கு சென்று வீட்டை எழுதி தரும்படி கேட்டு சீரங்கனை சரமாரியாக தாக்கி கொலை செய்தனர். ஜலகண்டாபுரம் போலீசார் வழக்குபதிந்து மூத்தமகன் சரவணனை பிடித்து விசாரிக்கின்றனர். தலைமறைவான ராஜ்குமாரை தேடி வருகின்றனர்.

Tags : Jalagandapuram , Father beaten to death by asking for a house near Jalagandapuram: Sons went crazy
× RELATED சேலம் அருகே பரபரப்பு ஓடை பாலத்திற்கு...